7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீங்க.. சரத்குமார் பரபரப்பு பேச்சு
தொண்டி: 7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீர்கள் என சரத்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
திருவாடானை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றாலும் அதில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்.
ரஜினியிடம் கேளுங்கள்
வந்தாரை வாழ வைப்போம். ஆள வைக்க விட மாட்டோம். கருத்து சொல்வதற்கு உண்மை வேண்டும். அது என்னிடம் மட்டுமே உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்றால் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
தமிழிசை கருத்து
இன்றைய தலைவர்களில் நான் தான் சிறந்தவனாக இருப்பேன். 7 பேர் விடுதலை குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட போது அவர் எந்த 7 பேர், நான் இப்போதுதான் வருகிறேன் என்று கூறியிருந்தார். அப்போது ரஜினி கேள்வியை உள்வாங்கவில்லை அவரிடம் அந்த கேள்வியை இன்னொரு முறை கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பார் என தமிழிசை கூறியுள்ளார்.
மன்னிப்பு
7 தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் தமிழக அரசியல் பேசக் கூடாது. செல்போன் மூலம் பேசாமல் தைரியமிருந்தால் நேரில் பேசுங்கள். போலீஸ் சட்டையை கழட்டி விடுவேன் என பேசுவது, பின்னர் மன்னிப்பு கேட்பது ஜனநாயகம் அல்ல.
அதிமுகவின் கொ.ப.செ.
நான் கடுமையாக உழைப்பவன். ஒரு காலத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக உழைத்தேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.