முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை... தேவர் பெருமகனார் பற்றி ஸ்டாலின் புகழாரம்..!
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனிடையே இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
ஒற்றை ஆளாக மொத்த மாவட்டத்தை தெறிக்கவிடும் திமுக எம்.பி... ஆய்வு என்றாலே வெலவெலக்கும் அதிகாரிகள்..!
தமிழ் மொழி பற்று
பசும்பொன் தேவர் அவர்களின் 113-ஆவது ஜெயந்தியை முன்னிட்டும், 58-ஆவது குரு பூஜையை முன்னிட்டும் பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறேன். நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் அவர்கள் தமிழ் மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர்.
மகிழ்ச்சியாக உள்ளது
தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர் தேவர் பெருமகனார் அவர்கள். மாபெரும் புகழுக்குச் சொந்தக்காரரான தேவர் பெருமகனுக்கு அவரது நினைவிடமான பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
தேவர் நினைவிடம்
மேலும், கழகம் ஆட்சியில் இருந்த போது; பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் அரசு கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மதுரையில் 13 அடி உயரத்திற்குத் தேவர் பெருமகனாருக்கு சிலை அமைக்கப்பட்டது
ஸ்டாலின் புகழாரம்
தேவர் திருமகனாரை பெருமைப்படுத்தும் வகையில் கழக ஆட்சியில் செய்த பணிகளை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் அவர்களின் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்!