84 நாட்களுக்கு பிறகு... மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை... சுற்றுலா பயணிகள் ஹேப்பி
ராமேஸ்வரம்: பாம்பன் பாலம் வழியாக ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தையும் - ராமேஸ்வரம் தீவையும் இணைப்பது பாம்பன் பாலமாகும். 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தின் தூக்கு பாலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அதன் காரணமாக ராமேஸ்வரத்திற்க்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வந்தது.ஒரு வாரத்திற்கு முன்பு பணிகள் நிறைவுற்று, ஆய்வுக்குப் பின் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
Tamil Nadu: Trains on Pamban bridge resume. The bridge was shut for repair work. pic.twitter.com/qrBXyxiDo8
— ANI (@ANI) February 27, 2019
இதை அடுத்து அதிகாலை 2 மணி முதல் பாம்பன் பாலம் வழியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பின்னர் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.