தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையினரோ அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர்.
அண்மையில் தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மீனவர்களை துப்பாக்கி முனையில் எச்சரித்து மிரட்டியது இலங்கை கடற்படை.
இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களை கற்களை கொண்டு தாக்கியுள்ளது இலங்கை கடற்படை. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகள், படகுகள் சேதமடைந்த நிலையில் கரை திரும்பினர்.
Comments
English summary
Tamilnadu Fishermen was Attacked Allegedly By Srilanka Navy.
Story first published: Tuesday, October 27, 2020, 9:35 [IST]