ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த "அந்த" காரியம்.. அலறிய கமுதி

கமுதியில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துவிட்டார்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ஒரே ஒரு வார்த்தைதான் காட்டமாக சொன்னார் கணவர்.. அது தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் மனைவி.. அத்துடன் தன்னுடைய 4 மாத குழந்தையையும் சேர்த்தே கொன்றுவிட்டார் அந்த 20 வயது இளம்பெண்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ளது மேல்முடிமன்னார் கோட்டை.. இங்கு வசித்து வருபவர் பொன்முருகன்.. 27 வயதாகிறது.. தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

Wife committed suicide 4 month Baby near Ramnad

இவருக்கு கடந்த வருடம் கல்யாணம் ஆனது.. அதே பகுதியைச் சேர்ந்த குருதேவிதான் மனைவி.. இவருக்கு 20 வயதாகிறது.. 4 மாத ஆண் குழந்தையும் இந்த தம்பதிக்கு இருக்கிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, பொன்முருகன் வேலைக்கு சென்றுவிட்டார்.. குருதேவியின் பெற்றோரும் எங்கோ வெளியில் சென்றிருந்தனர்.. குருதேவி மட்டும் குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென குழந்தையின் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீயை வைத்து பற்ற வைத்து கொண்டார்.

உடம்பெல்லாம் தீ பரவி, குழந்தையும், குருதேவியும் அலறினர்.. அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் உடல் முழுவதும் தீயினால் குருதேவியும், குழந்தையும் கருகி சுருண்டு விழுந்து இறந்தே விட்டனர்.. இதை பார்த்து அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் கமுதி போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து தாய்-சேய் உடல்களை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்!தோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்!

பின்னர் இதுகுறித்து விசாரணையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அன்றைய தினம் காலையில் நடந்த சம்பவம் தெரியவந்தது. காலையில் வேலைக்கு கிளம்பும்போது, "மதிய சாப்பாட்டை சீக்கிரமா ரெடி பண்ணு" என்று பொன்முருகன், மனைவியிடம் சொன்னாராம்.. இதை கொஞ்சம் காட்டமாக சொன்னாராம்.. இதுதான் குருதேவியின் தற்கொலை & கொலைக்கு காரணம்.

கணவன் சொன்ன அந்த வார்த்தையால் மனமுடைந்து போய்விட்டார்.. அழுது கொண்டே இருந்தவர், திடீரென தற்கொலைக்கும் முடிவெடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.. இவர்களுக்கு கல்யாணமாகி ஒரு வருடமே ஆவதால், இந்த விசாரணை ஆர்டிஓக்கு மாற்றப்பட்டுள்ளது.

English summary
Wife committed suicide 4 month Baby near Ramnad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X