ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி!

கணவனை உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்ற பெண் கைதானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம். உயிர் ஊசலாடும் ராமசாமி!- வீடியோ

    ராமநாதபுரம்: கணவனை மடியில் படுக்க வைத்து.. விஷ சோறு ஊட்டி விட்டு.. கொல்ல முயன்றுள்ளார் மனைவி பஞ்சவர்ணம். விஷ சோறு சாப்பிட்ட கணவனின் உயிரோ இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம். கல்யாணம் ஆகி 18 வருஷங்கள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் நிறைய சண்டை வந்துள்ளது.

    சில தினங்களுக்கு முன்பும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் ராமசாமியின் தம்பி கணேசன், சமாதானம் செய்து, தங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள இன்னொரு வீட்டில் இவர்களை தங்க வைத்தார்.

    மெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து.. இழுத்து போட்டு அடி வெளுத்த 2 பெண்கள் மெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து.. இழுத்து போட்டு அடி வெளுத்த 2 பெண்கள்

    சாப்பாடு

    சாப்பாடு

    ஆனால் அங்கேயும் 2 பேரும் சண்டை போட்டு கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம், கணவனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்யவே முடிவு எடுத்துவிட்டார். இதற்காக தக்காளி சாதம் செய்து, முட்டை பொறித்து, ரசம் வைத்தார். அந்த சமையலில் எலி மருந்தை கலந்து விட்டார்.

    தக்காளி சாதம்

    தக்காளி சாதம்

    சாப்பாட்டு நேரம் வந்ததும், ராமசாமியை மடியில் படுக்க வைத்து ஊட்டி விட்டுள்ளார். இனி நமக்குள் சண்டை வேணாம், உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை என்று சொல்லியே ஊட்டிவிட்டுள்ளார். மனைவி மடியில் படுத்து கொண்டு, ராமசாமியும், தக்காளி சாதம், முட்டையை சாப்பிட்டுள்ளார்.

    பஞ்சவர்ணம்

    பஞ்சவர்ணம்

    இதையடுத்து, கணேசனிடம் சென்ற பஞ்சவர்ணம், "விஷம் தந்துட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார்" என்று சொல்லவும், அவர் பதறியடித்து கொண்டு, ராமசாமியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்.

    கைது

    கைது

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மடியில் படுக்க வைத்து மர்டர் செய்ய முயன்ற மனைவியை தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

    English summary
    Wife tries to murder husband for family issue and police arrested near Ramanathapuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X