ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசாத காதலி.. கெஞ்சியும் பலன் இல்லை.. செல்பி எடுத்து அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய காதலன்

காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: எவ்வளவோ கெஞ்சி பார்த்தாச்சு... பேசவே இல்லை.. அதனால் தூக்கு மாட்டிய செல்பியை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார் காதலன்.

ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ராஜா. 24 வயதான ராஜா, தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவர் 4 வருஷமாக தனது சொந்தக்கார பெண் ஒருவரை லவ் செய்து வந்தார். அந்த பெண்ணும் ராஜாவை உயிருக்கு உயிராக விரும்பினார்.

மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது.. தஞ்சையில் பரபரப்பு மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது.. தஞ்சையில் பரபரப்பு

மனவேதனையில் ராஜா

மனவேதனையில் ராஜா

ஆனால் விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. ஆனால் மகளை கண்டித்தனர். வீட்டுக்கு பயந்த அந்த பெண்ணும், கொஞ்ச நாளாக ராஜாவிடம் பேசவில்லை. இதனால் மனவேதனைப்பட்ட ராஜா எவ்வளவு முயற்சி எடுத்து அந்த பெண்ணிடம் பேச பார்த்தும் முடியவில்லை. இந்த வருத்தத்தினால் மற்றவர்களிடமும் பேசாமலேயே ஒதுங்கினார்.

வாழவே பிடிக்கல

வாழவே பிடிக்கல

இந்நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்தவர், கடந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து காணாமல் போய்விட்டார். பின்னர் திடீரென தன் அண்ணனுக்கு போன் செய்த ராஜா, "எனக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கல, அதனால தற்கொலை செய்துக்க போறேன்" என்று சொல்லிவிட்டு போனையிம் கட் பண்ணிவிட்டார்.

செல்போன்

செல்போன்

உடனே அவரது அண்ணன் இதுசம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் ஒரு பக்கமும், சொந்தக்காரர்கள் ஒரு பக்கமும் ராஜாவை தேடினார்கள். அப்போது விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக தூக்கில் தொங்கிய ராஜாவை கண்டெடுத்தனர். அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு செல்போனை போலீசார் எடுத்தனர்.

அழுகிய உடல்

அழுகிய உடல்

ராஜாவின் உடல் ரொம்பவும் அழுகி இருந்தது. பின்னர், அதனால் அந்த இடத்திலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராஜாவின் செல்போனில், தற்கொலை செய்யும் முன்பாக ஒரு செல்பி எடுத்திருக்கிறார். அதாவது அவர் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு கடைசியாக எடுத்த செல்பி அது. அதை காதலியின் தோழிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னுடன் காதலி பேசாததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

கதறி அழுதனர்

கதறி அழுதனர்

ஆனால் இப்படி கழுத்தில் தூக்கு போட்டு கொண்டு அனுப்பிய செல்பியை பார்த்து அந்த தோழி, ராஜா விளையாட்டுக்கு இப்படி செய்கிறார் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதனால்தான் இதை அவரும் யாரிடமும் சொல்லாமல் இதை விட்டுவிட்டிருக்கிறார். ராஜாவின் அழுகிய உடலை கண்டு, அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Young Man Commits suicide by hanging in Vilathikulam due to Love Failure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X