செம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்!
Recommended Video
சேலம்: எம்எல்ஏ செம்மலையால் ஓங்கி குத்துவாங்கிய அதிமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தருமபுரி எம்பி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செம்மலை உடனிருந்தார்.
தேமுதிக நிலைமை மோசம்.. திருச்சியில் திண்டாடும் இளங்கோவன்.. திகுதிகு பிரச்சாரத்தில் காங்., அமமுக
பிரசாரத்தின் இடையே அதிமுக தொண்டர் ஒருவர் அன்புமணியை பார்த்து 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என கேட்டார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட நிர்வாகியின் வாயில் குத்து விட்டதோடு அவரை தாக்கினார்.
இதையடுத்து போலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை பாமக தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ செம்மலை தாக்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் இன்று திமுகவில் இணைந்தார்.