சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்காடு எஸ்டேட்டில் சத்தமாக கேட்ட இந்தி பாடல்.. கதவை உடைத்து பார்த்தால்.. பயங்கரம்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதி, புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு உள்ள எஸ்டேட்களில் பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் ஜார்கன்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41), மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இது லிஸ்ட்லயே இல்லையே.. இது லிஸ்ட்லயே இல்லையே.. "இவருக்கு" இவ்ளோ கிராக்கி இருக்கா.. ஆனா எடப்பாடியார்தான் பர்ஸ்ட்.. செம சர்வே

அருகிலேயே தங்கினார்

அருகிலேயே தங்கினார்

இவர்கள் உறவினர் ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வாரமாக கோண்டாபகன் - சுதிகேன்ஸ் குடியிருப்பிற்கு அருகில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார்.

சத்தமாக இந்தி பாடல்

சத்தமாக இந்தி பாடல்

இவர்கள் மூவரும் கடந்த 3 தினங்களாக ஒன்றாக மது அருந்தி வந்ததாகவும், நேற்று இரவு மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, இந்தி பாடல்களை சத்தமாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருவர் படுகொலை

இருவர் படுகொலை

இது குறித்து எஸ்டேட் மேலாளரிடம் அருகில் வசிக்கும் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலாளர் சுனில்குமார் அங்கு வந்து கதவு தட்டி திறக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு கோண்டாபகன் தலையில் வெட்டியும், சுதிகேன்ஸ் கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். ஹைரா போத்ரேவை காணவில்லை.

மோப்ப நாய் வருகை

மோப்ப நாய் வருகை

பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் லில்லியை கொண்டும் தேடுதல் நடத்தப்பட்டது.

 சோதனைச்சாவடியில் தீவிரம்

சோதனைச்சாவடியில் தீவிரம்

மேலும் இரு கொலைகளையும் ஹைரா போத்ரே தான் செய்திருக்க கூடும் என்று சந்தேகித்து, ஏற்காடு மலைப்பாதை சோதனைசாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், அருகில் உள்ள மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேடுதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தெரிவித்தார்.

English summary
An out-of-state couple working at the Yercaud estate in Salem district were hacked to death. Police are actively searching to catch the killer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X