ஒரு பக்கம் தண்ணி.. இன்னொரு பக்கம் நூடுல்ஸ்.. சாப்பிட்ட எஸ்தர்.. அப்படியே சுருண்டு விழுந்து மரணம்!
பியூட்டி பார்லரில் வேலை பார்த்த பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
Recommended Video
சேலம்: ஒரு பக்கம் தண்ணி, இன்னொரு பக்கம் நூடுல்ஸ்.. சாப்பிட்ட எஸ்தர் அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் எஸ்தர்!
சேலம் அழகாபுரம் பகுதி அத்வைத ஆஸ்ரம ரோட்டில் பியூட்டி பார்லர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எஸ்தர் என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். 28 வயதான எஸ்தர், மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்.
வேலை முடிந்தபிறகு எஸ்தர், தனது சக ஊழியர்கள் 3 பேருடன் சேர்ந்து நேற்றிரவு நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். பின்னர் உடனே மது அருந்தியதாகவும் தெரிகிறது.
ஆனால் கொஞ்ச நேரத்திலேயே எஸ்தர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். ஆனால் உடனிருந்தவர்கள் இதை கவனிக்கவில்லை. அப்படியே தூங்க போய்விட்டனர். இன்று காலை ரொம்ப நேரமாகியும் எஸ்தர் எழவில்லை. இதனால் அவரை வேலைக்கு செல்ல நண்பர்கள் எழுப்பி உள்ளனர்.
ஆனால் உடல் அசைவற்று கிடக்கவும் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள். இதையடுத்து அழகாபுரம் போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
எஸ்தர் வேலை செய்யும் பியூட்டி பார்லரில் ஏராளமாக கிடந்த வெளிநாட்டு மது பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தண்ணி அடித்ததால் எஸ்தர் இறந்தாரா? அல்லது நூடில்ஸ்-ல் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் இதுபற்றின உண்மை தெரியவரும். ஆனால் எஸ்தர் மரணத்தில் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.