சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி

பைக் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    தாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி - வீடியோ

    சேலம்: அப்பதான் கல்யாணத்துக்கு போய்விட்டு வந்திருந்தனர்.. வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது, தறிகெட்டு ஓடிய மஞ்சள் கலர் கார் ஒன்று வேகமாக மோதிவிட்டது.. இந்த சிசிடிவி காட்சிதான் வைரலாகிறது!

    சேலம் அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்த தம்பதி ஹரி - தவமணி... தவமணிக்கு 24 வயதாகிறது!!

    கடந்த 2-ந் தேதி இவர்களது சொந்தக்காரர் ஒருவருக்கு அம்மாபேட்டையில் திருமணம் நடந்தது.. அந்த கல்யாணத்துக்கு போய்விட்டு ஹரி, தவமணி, அவரது குழந்தைகள், அவரது தம்பி பிரகாஷ் ஆகியோர் சென்றிருந்தனர்.

    "இங்க வாடா.. இதை கழட்டி விடு" பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்

    2 பைக்குகள்

    2 பைக்குகள்

    கல்யாணத்தை முடித்து கொண்டு 2 பைக்கில் வீட்டுக்கும் திரும்பி வந்துவிட்டனர்... ஆனால் வீட்டு வாசலிலேயே 2 பைக்குகளில் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மஞ்சள் கலர் கார் வேகமாக வந்தது.. அதே பகுதியை சேர்ந்த சுதர்சனன், அவரது நண்பர் கமலக்கண்ணன் 2 பேரும் அந்த காரில் இருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டினார்.

    உயிர் தப்பினர்

    உயிர் தப்பினர்

    திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக தெருவில் ஓடியது... அப்படியே வந்து பைக்கில் உட்கார்ந்திருந்த இருந்த ஹரி, நின்று கொண்டிருந்த மனைவி தவமணி, குழந்தைகள் மீது மோதியது. இதில் எல்லோருமே மொத்தமாக கீழே விழுந்தனர்.. ஹரி, தவமணி காயத்துடன் உயிர் தப்பினர். குழந்தைகளுக்கு காயம் எதுவும் இல்லை.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    இதில் விழுந்த வேகத்தில், தவமணி மட்டும் காரின் முன்பக்க டயரில் சிக்கி கொண்டார்... அதற்குள் காரில் இருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து கீழே விழுந்த தவமணியை டயருக்குள் இருந்து மீட்டனர். தம்பதியை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தவமணியின் காலில் மட்டும் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.. தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது. இந்த விபத்து அங்கிருந்த ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    குடிபோதை

    குடிபோதை

    இதனை சோஷியல் மீடியாவில் இப்போது பதிவிடவும் அது வைரலாகி வருகிறது. அந்த காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்று முதலில் காரணம் சொன்னார்கள்... ஆனால் அம்மாபேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், கமலக்கண்ணன் தண்ணி அடித்துவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.. அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். தறிகெட்டு ஓடிவந்த கார், குடும்பத்தினர் மீது மோதும் இந்த சிசிடிவி காட்சி வைரலாகிறது!

    English summary
    car hit on the bike, three injured in a same family and this cctv footage becomes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X