மாம்பழமாம் மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்.. 39 ஆண்டுகள் கழித்து சேலம் எம்பி தொகுதியை கைப்பற்றிய திமுக!
சேலம்: சேலம் மக்களவை தொகுதியை 39 ஆண்டுகள் கழித்து திமுக கைப்பற்றியுள்ளதால் அண்ணா அறிவாயலத்தில் ஒரே கொண்டாட்டம் நடந்து வருகிறது.
மாம்பழத்துக்கு பெயர் போனது சேலம். இது ஓமலூர், வட சேலம், தென் சேலம், மேற்கு சேலம், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது சேலம் மக்களவை தொகுதியாகும்.
முதல் முறையாக கடந்த 1952-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் எஸ்வி ராமசாமி தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 1967-ஆம் ஆண்டு முதல் இரு முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. பின்னர் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
சேலம்
இதைத் தொடர்ந்து சேலம் தொகுதியில் கடந்த 1980-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்பியானார். பின்னர் காங்கிரஸ் கட்சியும் அதிமுகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தன.
திமுக தோல்வி
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் 5,51,546 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட உமாராணி 2,88,936 வாக்குகள் பெற்றார்.
இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!
திமுக தொண்டர்கள்
இந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் நேரடியாக திமுக களம் கண்டது. இந்த தொகுதியை எப்படியாயினும் கைப்பற்ற வேண்டும் என திமுக தொண்டர்கள் கடுமையாக போராடினர்.
எஸ் ஆர் பார்த்திபன்
திமுக சார்பில் சேலத்தில் எஸ் ஆர் பார்த்திபன் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் கே ஆர் சரவணன் போட்டியிட்டார். இந்த நிலையில் எஸ் ஆர் பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!