சூரியன் உதித்தபின்தான் தமிழகம் வெளிச்சத்தை பார்த்தது.. சேலத்தில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!
சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
Recommended Video
சேலம்: சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
சேலத்தில் கோட்டை மைதானத்தில் திமுக சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இதில் சேலம் தொகுதிக்கும் திமுகவிற்கு இடையே இருக்கும் நெருக்கம் குறித்து ஸ்டாலின் பேசினார்.
திமுக கட்சியிலிருந்து கொண்டு இப்படி பேசலாமா துரைமுருகன்?
ஸ்டாலின் பேச்சு
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில், திமுக தேர்தல் பிரச்சாரத்தை பார்க்க மக்கள் போட்டி போட்டுகொண்டு கூடுகிறார்கள். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெல்லும் என்பதை இது காட்டுகிறது. மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதிமுக, பாஜக மீது மக்கள் கடும் வெறுப்பில் இருக்கிறாரகள்.
கோட்டை
இந்த சேலம் கோட்டை மைதானம் சென்னை கோட்டையில் திமுக ஆட்சியை அமர்த்த வழி வகுக்கும். திமுக கோட்டைதான் சேலம். திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போதெல்லாம் சாமானிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் உருவாக்கி தரப்பட்டுள்ளது.
உதய சூரியன்
நம்முடைய கல்வி, சுயமரியாதை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றங்களுக்கு காரணமானது உதயசூரியன். திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான். அந்த மாநாட்டில் ஒரு தீர்மானத்திற்கு அண்ணாதுரை தீர்மானம் என்று சொல்லப்பட்டது. உதய சூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், கலைஞர் அவர்களே போட்டியிடுகிறார் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
வாக்களிக்க வேண்டும்
எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெறுகிறார் என்றால், அண்ணா, கலைஞர், நான் ஆகியோர் வெற்றி பெறுவதாக அர்த்தம். எனவே எஸ்.ஆர்.பார்த்திபனை வெற்றி பெற செய்யுங்கள். சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது. திமுக மூலம் அனைத்து சமுதாய மக்களும் கல்வி கற்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கல்வி கற்க முடிந்தது, என்று பேசியுள்ளார்.