பாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
காவிரியில் வெள்ளம் அதிகரித்து இருப்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
சேலம்: காவிரியில் வெள்ளம் அதிகரித்து இருப்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவிரியில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து நேற்று காலை மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் காவிரியில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அணை திறக்கப்பட்ட பின்பும் கூட நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.15 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி திறந்து விடப்படுகிறது. இன்னும் மேற்கு கால்வாயில் இருந்து 500 கனஅடி திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரியில் இருந்து பெரிய அளவில் தண்ணீர் ஓடுகிறது.
பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!
முக்கியமாக மேட்டூரை அடுத்து இருக்கும் பகுதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கிராமங்கள், ஓசூரை அடுத்து உள்ள கிராமங்கள், ஒகேனக்கலை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு அருகே காவிரியில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.
இதனால் தற்போது கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி காவிரியில் அதிக அளவு வெள்ளம் வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.