எதிர்க்கட்சிகள் என்றால் அப்படிதான்.. தேமுதிகவுடன் எந்த இழுபறியும் இல்லை.. முதல்வர் பளீச்
ஓமலூர்: எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனங்களை முன்வைப்பார்கள்தான். தேமுதிகவுடனான கூட்டணியில் எங்களுக்கு எந்த இழுபறியும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிகவுடன் அதிமுகவுக்கு இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலத்தில் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் அதை தீர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த சேலம் வந்துள்ளேன்.
தேர்தல் அறிவித்து விட்டால் அதிகாரிகளை சந்திக்க இயலாது. அதனால் நான் தற்போதே சந்தித்தேன். தேமுதிகவுடன் எந்த இழுபறியும் கிடையாது.
எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனங்களை முன்வைப்பார்கள்.
கே சி பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா? முதல்வர் கேள்வி
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். தேமுதிக ஆலோசித்து முடிவெடுக்கும். திமுகவை விமர்சித்த வைகோ தற்போது எப்படி புகழ்ந்து வருகிறார். பேரறிவாளனை பரோலில் விடுவித்தது அதிமுக அரசுதான்.
7 பேர் விடுதலையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள். 7 பேர் விடுதலைக்காக திமுக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மனித சங்கிலி என்ற நாடகம் நடத்தப்படுகிறது. 7 பேர் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவை கூட்டத்தில் என்ன கருத்தை எழுதி வைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும்.
அரசியல் நாகரீகம் கருதி
அதை நான் சொல்ல விரும்பவில்லை.
திமுக அமைச்சரவை கூட்டத்தில் ஏழு பேரில் ஒருவர் ஒருவரை மட்டும் விடுவிக்க குறிப்பு எழுதி உள்ளனர்
. இப்பிரச்சினையில் அதிமுகவை குறை கூட திமுகவிற்கு எந்தவித அருகதையும் தகுதியும் கிடையாது.
அதிமுக ஆட்சியில் குறைகள் குறித்து திமுக பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது
. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது பொறுக்க முடியாமல் திமுக நாள்தோறும் பொய் புகார்களை கூறி வருகிறது என்றார்.