சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேய் எல்லாம் ஓட்றதில்லைங்க.. அப்பாவை அந்த பொண்ணு மிரட்டியிருக்கு.. அதான் 2 அடி வச்சேன்.. திருநங்கை

பொய் சொன்னதால் பெண்ணை அடித்தேன் என்று திருநங்கை விளக்கம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேய் எல்லாம் ஓட்றதில்லைங்க.. அப்பாவை அந்த பொண்ணு மிரட்டியிருக்கு.. அதான் 2 அடி வச்சேன்.. திருநங்கை

    சேலம்: "தலைமுடியை விரிச்சி போட்டுட்டு, கண்ணை உருட்டி, அவங்க அப்பாவை மிரட்டி.. 20 நாளா ராவடி செய்து பிரச்சனை செய்திருக்கு அந்த பொண்ணு. அதனாலதான் லேசா 2 அடி அடிச்சேன்.. ஏன் பொய் சொன்னேன்னு கேட்டுதான் அடிச்சேன்.. பேய், பிசாசு எல்லாம் நான் ஓட்டறது இல்லை" என்று திருநங்கை இளம்பெண்ணை பிரம்பால் தாக்கிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயிலில் உள்ளது.. இங்கு அருள்வாக்கு சொல்பவர் திருநங்கை மதுர.. இவரது உண்மையான பெயர் ஐயப்பன்.. ஆனால் மதுர என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார்.

    குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை, பேய், பில்லி, சூனியம் எதுவாக இருந்தாலும் சுற்றுவட்டார மக்கள் இவரிடம்தான் வருவார்கள்.. இவரது பேச்சை சிலர் நம்பவும் செய்கின்றனர்.. அந்த பேச்சை வீடியோவாக எடுத்து, யூடியூடிப்பில் இந்த திருநங்கை தனக்குதானே விளம்பரம் செய்தும் வருகிறார்.

    லவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்! லவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்!

    திருநங்கை

    திருநங்கை

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, பெற்றோர் இங்கு அழைத்து வந்தனர். அப்போது, திருநங்கை மதுர, அந்த பெண்ணை பிரம்பால் அடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும், துன்புறுத்துவதாக கூறப்பட்டது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியானது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணின் வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், தனக்கு பேய் பிடித்ததாக பொய் சொன்னதால்தான் திருநங்கை அடித்தார் என்றும், ஸாரி என்றும் சொல்லி விளக்கினார்.

    மதுர விளக்கம்

    மதுர விளக்கம்

    எனினும், பெண்ணை தாக்கும் இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருவதுடன், மதுர மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், திருநங்கை மதுர இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசியபோது:

    சர்ச்சை

    சர்ச்சை

    "நாங்க ஒரு கோயில் மாதிரி வெச்சிருக்கோம்.. சொந்த கோயில் அது.. எல்லாரும் வழிபாட்டு ஸ்தலம் மாதிரி வெச்சிருந்தோம்.. நான் போய் யாரையும் வாங்கன்னு கூப்பிடல.. எல்லாருமே என்னை தேடி வர்றாங்க.. அவங்களுக்கு நான் சொல்றது நடந்தது.. இதுல என்ன ஒன்னுன்னா, தேவையில்லாத சர்ச்சையை கிளப்பி இருக்காங்க.

    கூச்சல்

    கூச்சல்

    அருள்வாக்கு மட்டும்தான் சொல்வேன்.. பேய் பிசாசு நான் ஓட்டினது இல்லை.. ஆனா, நான் பேய், பிசாசு ஓட்டினதா சொல்லி ஏன் எல்லாரும் போட்டிருக்காங்கன்னு தெரியல. அந்த பொண்ணுதான் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, கூச்சல் போட்டது.. அங்கே 50 பேர் இருந்திருப்பாங்க.. எல்லாத்துக்கும் வீடியோ இருக்கு" என்றார்.

    20 நாளா பிரச்சனை

    20 நாளா பிரச்சனை

    உடனே செய்தியாளர்கள், "பேய் அந்த பொண்ணுக்கு இல்லேன்னுதான் தெரியுமே, அப்பறம் ஏன் அப்படி அடிச்சீங்க" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மதுர, "பேய் பிடிச்சதாலதான் அடிச்சேன்.. தலைமுடியை விரிச்சி போட்டுட்டு, கண்ணை உருட்டி, அவங்க அப்பாவை மிரட்டி.. 20 நாளா ராவடி செய்து பிரச்சனை செய்திருக்கு அந்த பொண்ணு. அதனாலதான் அடிக்க போனேன்.

    துரோகம்

    துரோகம்

    நான் பிரம்பு தூக்கும்போதே, "எனக்கு பேய் பிடிக்கல்லைன்னு" சொல்லி ஒத்துக்கிடுச்சு. ஆனா, நான் அடிச்ச மாதிரி எல்லாரும் போட்டிருக்காங்க. இதற்கு செய்தியாளர்கள், "ஏன் பொய் சொன்னேன்-ன்னு கேட்டு கேட்டு அடிக்கிறீங்களே" என்றனர். அதற்கு மதுர, "அப்பா, அம்மா கிட்ட ஏன் பொய் சொன்னே, அவங்களை ஏன் ஏமாத்துறே.. ஏன் துரோகம் பண்ணே? உன் படிப்பு, உன் வாழ்க்கை, எல்லாம் கெட்டுடுமேன்னு நான் சொன்னேன்..

    அனுமதி

    அனுமதி

    நாங்கதான் இப்படி ஆதரவு இல்லாம திருநங்கையா மாறிட்டோம்.. உனக்கு குடும்பம், படிப்பு இருந்தும் ஏன் இப்படி நடந்துக்கிறேன்னுதான் கேட்டேன்.. இதை எல்லாரும் தப்பா மாத்திக்கட்டாங்க.. தேவையில்லாததை எல்லாம் இணைச்சு, புணைச்சு மாத்திட்டாங்க. இதுக்கு எங்க கிட்ட எந்த அனுமதியும் வாங்கல.. எல்லா சேனல்லயும் நேத்துல இருந்து இந்த நியூஸ்தான் போட்டுட்டு இருக்காங்க.

    காதல்

    காதல்

    காதல் புனிதமானது.. உண்மை காதலை நாங்கள் சேர்த்து வைப்போம்.. காதலை பிரிக்க எந்த சத்தியத்தையும் வாங்கவில்லை.. பொய் சொல்லக்கூடாது என்றுதான் சத்தியம் வாங்கினேன்.. பொய் பேசியதால் அந்த பெண்ணை 2 அடி மட்டும்தான் அடித்தேன்.. அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன்தான் யூடியூப்பிலும் பதிவு ஏற்றினோம்" என்றார்.

    English summary
    ghost drama for love issue: salem transgender madura explained that she did not attack the young girl
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X