கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை!
மனைவியை கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
சேலம்: குடும்பம் நடத்த கூப்பிட்டும் வராத மனைவியை, முட்புதர் பகுதியில் இழுத்து சென்று, கத்தியால் அறுத்து கொன்றுள்ளார் காதல் கணவர்!
சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. 26 வயதாகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. 21 வயதில் மோகனேஸ்வரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.. 4 வருஷத்துக்கு முன்பு உயிருக்கு உயிராக காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டவர்கள். கோவையில் வீடு எடுத்து 3 வருடமாக வசித்து வந்தனர். ஆனால், தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது. அதனால், கோபியுடன் கோபித்து கொண்டு, மோகனேஸ்வரி 2 மாதத்திற்கு முன்பு குழந்தையை துக்கி கொண்டு அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார்.
அதன்பிறகு, துணிக்கடை ஒன்றில் வேலைக்கும் போக ஆரம்பித்தார். வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வரும் மகள், நேற்று இரவு ரொம்ப நேரம் ஆகியும் வராததால், இவரது தந்தை பதட்டமானார். அதனால், பஸ் ஸ்டாண்ட் சென்று பார்க்கலாம் என்று 10 மணிக்கு மேல் கிளம்பி போனார். அப்போதுதான், கங்காபுதூர் அருகே ஒரு பெண்ணை கழுத்து அறுத்து யாரோ கொன்றுவிட்டார்கள் என்று சொல்லவும், பதறி கொண்டு ஓடினார்.
சிக்னலில் நின்ற போலீஸ்காரர்.. மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி பரிதாப பலி.. சென்னையில் சோகம்!
அங்கு தனது மகள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அலறினார். தகவலறிந்து வீராணம் போலீசார் விரைந்து வந்து, விசாரணையை ஆரம்பித்தனர். குடும்ப விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. கணவர் கோபி, கங்காபுதூரில் நேற்று வந்துள்ளார்.. வேலை முடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட்டுள்ளார். அதற்கு மனைவி மறுப்பு சொல்லவும், இது வாக்குவாதமாக நடுரோட்டிலேயே நடந்துள்ளது.
அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத முட்புதர் பகுதி என சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கோபி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மோகனேஸ்வரி சுருண்டு விழவும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் கோபி. இப்போது போலீசார் கோபியை தீவிரமாக தேடி வருகிறார்கள். தாயை இழந்து, தந்தையையும் பிரிந்து.. இவர்களது 3 வயது குழந்தை தவித்து வருகிறது!