மேட்டூர் அணைக்கு கமல்ஹாசன் திடீர் விசிட்.. வரவேற்ற மக்கள் கூட்டம்
Recommended Video
சேலம்: சேலம், நாமக்கல் சென்றுள்ள கமல்ஹாசன் மேட்டூர் அணையின் நீர் மட்டத்தை பார்வையிட்டார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மக்களிடையே பேசிய அவரிடம் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அவர் மக்கள் சந்தித்துள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்காமல் டாஸ்மாக்கில் தாராளமான தண்ணீரை விநியோகித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
மேட்டூர் அணையை நம்மவர் பார்வையிட்டார்.,#Nammavar#MakkalNeedhiMaiam pic.twitter.com/LLl7GLrEEd
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 13, 2018
இதைத் தொடர்ந்து அவர் மேட்டூர் அணையை பார்வையிட்டார். அப்போது நீர் மட்டம் குறித்தும் பாசன பயன்பாடு குறித்தும் உடனிருந்தவர்கள் கமலுக்கு விவரித்தனர். செல்லும் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை வரவேற்றனர்.
அப்போது அங்கு கமலை பார்க்க ஆர்வமாக இருந்த ஒரு சிறுவனை காரில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
[சர்வதேச அளவில் தமிழ் எழுத்துருவை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் - சென்னையில் நடந்த பயிற்சிப் பட்டறை!]