சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்!

காருக்குள் நிர்வாண நிலையில் காதல் ஜோடி சடலம் மீட்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    காருக்குள் முழு நிர்வாணமாக கிடந்த காதலர்கள் சடலம்-வீடியோ

    சேலம்: காதல் ஜோடி ஒன்று காருக்குள் நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயதாகிறது. பிளஸ்-2 வரை படித்திருக்கிறார். இவருடைய அப்பா கோபி வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். அதனால் சுரேஷும் அப்பாவின் தொழிலையே கவனித்து வந்துள்ளார்.

    இவர் ஜோதிகா என்ற 21 வயது பெண்ணை காதலித்துள்ளார். ஜோதிகா ஓமலூர் அருகே உள்ள இன்ஜினியரிங் காலேஜில் 3ம் வருடம் படித்து வந்தார். சுரேஷூம், ஜோதிகாவும் 2 வருடமாக காதலித்து வந்தது, வீட்டிற்கு தெரிந்துவிட்டது.

    நோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு!நோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு!

    மாயம்

    மாயம்

    ரெண்டு பேருமே ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், ஜோதிகாவின் வீட்டில் ரொம்பவும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இருவரையும் கூப்பிட்டு பெரியவர்கள் கண்டித்து இருக்கிறார்கள். வீட்டில் எல்லோருமே சேர்ந்து திட்டி, எதிர்ப்பை காட்டவும் என்ன செய்வதென்றே தெரியாமல், நேற்று முன்தினம் இந்த ஜோடி மாயமாகிவிட்டது. இதனால் பயந்துபோன இரு வீட்டு நபர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர். போலீசிலும் புகார் செய்தனர்.

    ஜவுளிக்கடை

    ஜவுளிக்கடை

    இதனிடையே ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சுரேஷின் கார் ஷெட் உள்ளது. அங்கேயும் போய் தேடும்போதுதான், 2 டூவீலர்கள் அந்த வாசல் முன்பு நின்றிருந்தது. அதனால் ஷட்டர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் காதல் ஜோடி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தனர்.

    உல்லாசம்

    உல்லாசம்

    இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் சடலங்களை கட்டிப்பிடித்து கொண்டு அழுதனர். தகவலறிந்து செவ்வாய்பேட்டை போலீசார், விரைந்து வந்து சடலங்களை மீட்டு விசாரணையை கையில் எடுத்தனர். அப்போதுதான், பெரியவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பதால் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளனர். சாவதற்கு முன்பு இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர். பிறகு சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டுள்ளனர்.

    விசாரணை

    விசாரணை

    எனினும், இவர்கள் இறப்பிற்கு வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா, மூச்சடைத்து இறந்து விட்டார்களா என்பதை போலீசார் விசாரித்து வருவதுடன், அவர்களுடைய செல்போன் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். காதல் ஜோடி ஒன்று நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    lovers body found without dress in car and police investigation is going on it near salem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X