முதல்வர் வெளிநாடு செல்வது ஏன் என்று தெரியும்.. வாழ்த்துகள்.. ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்
முதல்வர் பழனிச்சாமி இன்று வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஏன் என்று தெரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Recommended Video
சேலம்: முதல்வர் பழனிச்சாமி இன்று வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஏன் என்று தெரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி இன்று காலை வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 10ம் தேதி அவர் பயணம் முடித்து நாடு திரும்புவார்.
இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமியின் பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பேசினார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து ஸ்டாலின் பேசினார்.
ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது பேச்சில், எடப்பாடி பழனிச்சாமியை சேலம் தாண்டினால் எங்கும் யாருக்கும் தெரியாது. நான் தமிழகம் முழுக்க கிராம சபை கூட்டங்களை நடத்தி இருக்கிறேன்.எந்த கிராமத்திற்கும் என்னால் தனியாக செல்ல முடியும். யாருடனும் என்னால் தனியாக பேச முடியும். முதல்வர் பழனிச்சாமியால் ஏதாவது ஒரு கிராமத்திற்கு தனியாக செல்ல முடியுமா. அவரின் லட்சணம் அதுதான்.
எத்தனை வருடம்
8 வருடமாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. இந்த 8 வருடத்தில் அதிமுக மக்களுக்கு ஒரு நல்லது கூட செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது. அப்போது எல்லாம் மாறும். சட்டசபை இடைத்தேர்தல் அதற்கு சரியான சாட்சி. இந்த ஆட்சி முடிவிற்கு வர போகிறது.
வெளிநாடு
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு போகிறார். அதுவும் 14 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். செய்யட்டும். அவரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். ஆனால் அவர் இப்படி திடீர் என்று வெளிநாடு செல்வது ஏன்? எதற்காக இந்தப் பயணம்? அவர் சுய லாபத்திற்காக இந்த பயணத்தை செய்கிறார்.
குறிக்கோள்
மக்களுக்கு முதலீட்டோடு வந்தால் பாராட்டுவோம். ஆனால் அவரின் குறிக்கோள் அது இல்லை. நீங்கள் வெளிநாடு செல்வது ஏன் என்று தெரியும், முதல்வர் தன்னுடைய தனிப்பட்ட முதலீட்டை பெருக்குவதற்காக வெளிநாடு செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை வைத்து அவர் வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க செல்கிறார், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.