பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
Recommended Video
சேலம் : காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழை காரணமாக காவிரியில் அதிக அளவில் நீர் பெருக்கடுத்துள்ளது.
இதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 1000க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் காவிரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகிக் கொண்டே சென்றது.
காவிரி எப்படி
முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.
திறந்தார்
இதையடுத்து நேற்று காலை மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்த நீர் கல்லணை வழியாக கடைமடை சென்று பாசனத்திற்கு பயன்படும். அதன் பின் நேற்று மாலை நீர்வரத்து 3 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.
எங்கு சென்றது
மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் காவிரியில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை திறக்கப்பட்ட பின்பும் கூட நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.15 லட்சம் கனஅடியாக உள்ளது.
இப்போது என்ன
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணை திறக்கப்பட்ட பின்பும் கூட அணை முழு கொள்ளளவை அடைய வாய்ப்புள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 72.50 டி.எம்.சியாகவும் உள்ளது.