மேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு.. பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது!
Recommended Video
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17000 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பின. தொடர் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று வரை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 19000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17000 கனஅடியாக குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.30 அடியாகவும், நீர்இருப்பு 89.22 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் திறப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் சரியும் என தெரிகிறது.