அடப்பாவமே.. சாக்லெட் வாங்கித்தர தாய் மறுப்பு.. பிறந்த நாளன்று +1 மாணவி தற்கொலை.. சேலத்தில் ஷாக்!
சேலம் : சேலம் அருகே, பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கித்தர தாய் மறுத்ததால், விரக்தியடைந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதன் பின்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கித்தர தாய் மறுத்ததால், பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று, கன்னங்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது.
“என்னால முடியல.. 8 வருசமா இந்தக் கொடுமை”- அழுது தீர்த்து வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!
பிறந்த நாளுக்கு சாக்லெட்
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சரவணா நகரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் மகள் தமிழ்நேயா என்பவர், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தமிழ்நேயாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து, காலையில் தனது தாயுடன் பேசியுள்ளார். பிறந்த நாளன்று, உறவினர்கள் மற்றும் தனது பள்ளி தோழிகளுக்கு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்று தாயிடம் சாக்லெட் வாங்கித் தருமாறு தமிழ்நேயா கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தாய் ராஜேஸ்வரி, சிறு குழந்தைகள் போல் பிறந்த நாளுக்கு சாக்லெட் கேட்கிறாயே? ப்ளஸ் - 1 படிக்கும் நீ என்ன சிறு குழந்தையா? என கூறியுள்ளார். இதனால், தாயுக்கும், மகளுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மாணவி தூக்கிட்டு தற்கொலை
தன்னுடைய பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கி தருமாறு ஆசையாக கேட்டதற்கு பெற்ற தாயே மறுப்பு தெரிவித்து விட்டாரே என்று நினைத்து தமிழ்நேயா மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களும், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி தமிழ்நேயா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-1 மாணவி
பிறந்த நாளை பள்ளி தோழிகளுடன் உற்சாகமாக கொண்டாட சாக்லெட் வாங்கித் தருமாறு கேட்ட பிளஸ்-1 மாணவி, சாக்லெட் வாங்கித் தர தாய் மறுப்பு தெரிவித்ததால், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.