சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாயை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்க.. கதறியழுத ரவுடி.. பிளேடால் கழுத்தை அறுக்க முயன்றதால் பரபரப்பு!

சேலம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாயை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்க.. கதறியழுத ரவுடி-வீடியோ

    சேலம்: "நாயை அடிக்கிற மாதிரி எங்களை ஜெயில்ல அடிக்கிறாங்க.. மரியாதை இல்லை.. இவங்களை கேட்க யாருமே இல்லையா.. மனித உரிமை சங்கம் எல்லாம் என்ன செய்யறாங்க?" என்று கேட்டு ரவுடி ஒருவர் தன் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தை உலுக்கி உள்ளது.

    சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரவுடி தேவன் பிரகாசம். இவர் மீது ஏகப்பட்ட கொலை முயற்சி, திருட்டு, அடிதடி கேஸ்கள் உள்ளன. இதெல்லாம் நிலுவையில் உள்ளன. இப்போதைக்கு இவர் நாமக்கலில் வசித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமகிரிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டு 2 மாதமாக விசாரணை கைதியாக சேலம் ஜெயிலில் உள்ளார்.

    சித்ரவதை

    சித்ரவதை

    இந்நிலையில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் தரக்குறைவாக பேசி அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி, தேவன் பிரகாசம் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து பதறிய அங்கிருந்த சிறை காவலர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சை வேணாம்

    சிகிச்சை வேணாம்

    இதனால் கழுத்துப் பகுதியில் கைதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் நியாயம் கிடைக்கும்வரை சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்து வருகிறார் ரவுடி. அது மட்டுமில்லை.. கழுத்தில் வெட்டு காயங்கள் மிக ஆழமாக இருந்தும், ரவுடி சிறையில் நடந்த விவரங்களை விசாரிக்க வந்த போலீசாரிடம் கூறினார்.

    பனிஷ்மெண்ட்

    பனிஷ்மெண்ட்

    அப்போது, "ஜெயில்ல.. என்கூட சேர்த்து 4 பேரை என்னை ரொம்பவும் கொடுமைப்படுத்தி சித்ரவதை படுத்தறாங்க சூப்பிரண்ட்டு, ஜெயிலரு, இவங்க எல்லாம் தப்பு பண்ணல. இவங்களுக்கு எந்த விஷயமும் தெரியாது. சௌந்தரராஜன், இன்னும் சில போலீஸ்காரங்கதான் ரொம்ப மோசமா பேசறாங்க.. மரியாதையே இல்லை.. சாப்பாடு சரியில்லைன்னு சொன்னா அதுக்கு பனிஷ்மெண்ட்.. எச்ச துப்பினா அதுக்கு பனிஷ்மெண்ட்.. ஆனா எங்களை நாய் அடிக்கிற மாதிரி அடிச்சி போடறாங்க. அதை கேட்க ஆள் இல்லை.

    மனித உரிமைகள் சங்கம்

    மனித உரிமைகள் சங்கம்

    என்கூட இருந்தவங்களையும் பனிஷ்மென்ட்ல பூட்டி வெச்சிருக்காங்க. இப்போ விஷயம் வெளியே தெரிந்ததும், அவங்களை ரிலீஸ் பண்ணி இருப்பாங்க. இப்போ போனீங்கன்னா, எங்களை அடிச்ச கம்பு, இரும்பு எல்லாம் இருக்கும். என்னையும் ரொம்ப சித்ரவதை பண்ணிட்டாங்க. மனித உரிமை சங்கம் எல்லாம் என்னா பண்றாங்க?" என்று கேள்வி எழுப்பினார் ரவுடி.

    English summary
    Prisoner Devan Prakagasam attempt suicide in Salem Central Jail and he has complained to the prison guards
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X