சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணே தெரியல.. ஒரே புகை.. ஓடும் பஸ்ஸில் திடீர் தீ.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்.. சேலத்தில் பரபரப்பு

ஓடும் பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீர் தீ | Bus catches fire in Salem

    சேலம்: ஓடிக் கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்துவிட்டது.. பஸ் கண்ணாடிகள் வெடித்து சிதறிவிட்டன.. எனினும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. கரும்புகை சூழ்ந்து கொண்டு, அந்த பகுதியே கும்மிருட்டாக தென்பட்டது பெரும் பரபரப்பை தந்துவிட்டது!

    சேலம் அருகே இளம்பிள்ளையில் இருந்து தனியார் பஸ் ஒன்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே வரும்போது, திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.. பஸ் கண்ணாடிகள் நொறுங்கி சிதறின.

    நன்றியில்லாத சொரி நாய்.. கார்ப்பரேஷன் கூண்டு வண்டி வரும் வரை குரைக்கும்... யாரை சொல்றார் சேகர்!நன்றியில்லாத சொரி நாய்.. கார்ப்பரேஷன் கூண்டு வண்டி வரும் வரை குரைக்கும்... யாரை சொல்றார் சேகர்!

    பஸ் டிரைவர்

    பஸ் டிரைவர்

    ஓடிக் கொண்டிருக்கும்போதே பஸ் எரிந்ததும், கண்ணாடி நொறுங்கி சிதறியதும் கண்டு பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் டிரைவர் சுதாரித்து கொண்டார்.. உடனடியாக பஸ்ஸை தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருக்கக்கூடிய அணுகுசாலையில் ஓரங்கட்டினார்... பயணிகள் எல்லோரையும் சீக்கிரமாக கீழே இறங்குமாறு சொன்னார்... இதையடுத்து அனைவரும் பஸ்ஸைவிட்டு வேகவேகமாக வெளியேறினர்.

    கதறினர்

    கதறினர்

    நல்லவேளை, அதுவரை சிறிய அளவில் துவங்கி எரிந்த தீ, பயணிகள் இறங்கிய உடனேயே மளமளவென பஸ் முழுவதும் பற்றிக் கொண்டு எரிந்தது.. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    எலும்புக்கூடு

    எலும்புக்கூடு

    ஆனாலும் பஸ் மொத்தமாக எரிந்து கருகி எலும்புகூடாகி விட்டது.. அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து கொண்டது.. இதனால் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எந்த வாகனமும் ஓட்ட முடியவில்லை.. டிராபிக் ஜாம் ஆனது.. கண்ணே தெரியவில்லை... பின்னர் கரும்புகை குறைய தொடங்கிய பிறகே, போலீசார் நெரிசலை சீர் செய்ய முடிந்தது.

    பரபரப்பு

    பரபரப்பு

    பஸ்ஸில் இருந்த பேட்டரிக்கும் டீசல் டேங்கருக்கும் நடுவே உள்ள ஒயர் உராய்ந்துள்ளது.. பஸ் பேட்டரியில் இருந்து மின்கசிவு வந்ததால்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.. ஆனால் பயணிகள் நீண்ட நேரம் பீதியிலேயே இருந்தனர்.. நடுரோட்டில் ஓடுகிற பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.

    English summary
    private bus fire accident near salem due to electric problem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X