சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.. ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்து.. ரஜினிகாந்த் பரபர பேட்டி - வீடியோ

    சேலம்: பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை என சேலத்தில் ராமானுஜ ஜீயர் பரபரப்பாக பேசியுள்ளார்.

    பொங்கல் பண்டிகைக்கு முன்னர் துக்ளக் பொன் விழாவில் ரஜினி பேசியதே பிரச்சினைகளுக்கு காரணம். 1971-ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் பேரணியை நடத்தினார். அப்போது ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது.

    Ramanuja Jeeyar says about Rajini speech on Periyar

    இதை தைரியமாக தனது பத்திரிகையில் வெளியிட்டவர் சோ என அவரை பாராட்டும் போது சர்ச்சையை சந்தித்தார் ரஜினி. அது போல் ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்பதுதான் திராவிடர் கழகத்தினரின் வாதமாக உள்ளது.

    இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று முன் தினம் விளக்கமளிக்கையில் தான் பேசியது உண்மை என்றும் எதையும் கற்பனையாக தெரிவிக்கவில்லை என்றும் தான் யாரிடமும் மன்னிப்பு கோர முடியாது என தெரிவித்தார்.

    இது பிரச்சினையை பெரிதுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேலத்தில் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் பேசுகையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த ஆகம விதிகளின்படி எந்த தவறும் இல்லை.

    அது போல் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.

    English summary
    Ramanuja Jeeyar says that there is no wrong in Rajinikanth's speech about Periyar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X