ஏன் கதவை சாத்துறே.. என்ன செய்ய போறே.. பதற வைக்கும் சேலம் வக்கிரம்.. மோகன்ராஜின் அட்டூழிய வீடியோ
பெண்களை மிரட்டி சீரழித்த ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியாகி உள்ளது
Recommended Video
சேலம்: "ஏன் கதவை சாத்துறே" என்று பெண் கேட்கும் கேள்வியில் உள்ள நடுக்கம் தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. அப்பெண்ணை கட்டிலில் பலவந்தமாக பிடித்து தள்ளி.. மிரட்டி.. பணிய வைத்து.. பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றும் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் காம லீலை வீடியோ ஒன்றுதான் தற்போது வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர்தான் அந்த ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம்.
ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் தாங்காமல் ஓடியே போய்விட்டார். அடுத்ததாக 2-வது கல்யாணம் செய்தார் மோகன்ராஜ். அந்த பெண்ணும் இவர் செய்த பாலியல் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார்.
40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்.. சேலத்தில் பெரும் பரபரப்பு
புகார்
அதற்கு பிறகு மோகன்ராஜ் கல்யாணம் செய்யவில்லை. பதிலாக, பெண்களை மிரட்டி பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற தொடங்கினார். பெண்களை ஏமாற்றி, நாசம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதை பற்றி 3 நாளைக்கு முன்பு ஒரு பெண் மாவட்ட எஸ்பி ஆபிசில் புகார் தரவும்தான் விசாரணை ஆரம்பமானது. பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாக தொடங்கியது.
உல்லாசம்
காகாபாளையம் பஸ் ஸ்டாப் பக்கம்தான் மோகன்ராஜ் ஆட்டோ ஸ்டேண்ட். அங்கு இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களிடம் சிரித்து பேசி மயக்கி, போன் நம்பரை வாங்கிவைத்து கொள்வாராம். பண கஷ்டத்தில் உள்ள பெண்கள் என்றால் பிறகு, பண உதவி செய்வது போல பேச்சு தந்துகொண்டே, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து.. மிரட்டி... உல்லாசமாக இருப்பார். அப்படி இதுவரை 40 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மோகன்ராஜிடம் ஏமாந்துள்ளனர்.
ஆபாச வீடியோ
ஒரு சிலர் இவனுக்கு பயந்து ஊரை காலி செய்து கொண்டே போய்விட்டனர். ஒரு பெண்ணை காணவில்லையாம். வலையில் விழும் பெண்களிடம் மோகன்ராஜ் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வானாம். இப்போதைக்கு போலீசார் இவனது 7 ஆபாச வீடியோவை பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஒரு வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
ஆவேசம்
அதில் அந்த பெண்ணை மிரட்டி பணிய வைக்கும் காட்சி மட்டும் வெளியாகி உள்ளது. பெண்ணை மிரட்டியும், ஆவேசமாக பேசியும் உல்லாசம் அனுபவிப்பதும் கண்கூடாக தெரிகிறது. மோகன்ராஜ் பற்றி முழுசா விஷயம் தெரியாத ஒரு நடுத்தர வயது பெண்தான் இவர். எப்படியோ பேசி தன் வீட்டுக்கு வரவழைத்து விட்டார் மோகன் ராஜ்! பெரிய வசதி கொண்ட ரூம் போல இல்லை அது. தயங்கி நிற்கும் பெண்ணோ, முதலில் குழப்பமாகவும், பிறகு பயந்தும் நடுங்கி மோகன்ராஜை பார்க்கிறார்.
பயம்
அப்போது மோகன்ராஜ் "முதல்ல உட்காரு.." என்கிறார். "என்ன விஷயம் சொல்லு... ஏன் வர சொன்னே" என்று அந்த பெண் கேட்கிறார். உடனே மோகன்ராஜ் கதவை சாத்தி தாழ்ப்பாள் போடுகிறார். அந்த பெண், "ஏன் கதவை சாத்துறே.. என்ன விஷயம்" என்று கேட்க லேசான பயம் அவரது குரலில் தெரிகிறது .
கை ஓங்குகிறார்
உடனே மோகன்ராஜ் தன் சட்டையை கழற்றிவிட்டு, லுங்கியுடன் அந்த பெண் அருகே செல்கிறார். படுக்கையில் பெண்ணை பலவந்தமாக பிடித்து தள்ளுகிறார். இதை அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பெண் பிடி கொடுக்க மறுக்கவும், அடிக்க கை ஓங்குகிறார்.. அங்கிருந்து தப்பி செல்ல முடியாதபடி, கட்டிலில் விழுந்து கிடந்த அந்த பெண்ணின் மீது மோகன்ராஜ் அப்படியே மேலே விழுகிறார்"
நடவடிக்கை
இப்படி அந்த வீடியோ காட்சி உள்ளது. அரசியல் பின்புலத்தை வைத்து கொண்டு இவ்வளவு காலம் காம வேட்டை ஆடிய மோகன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடக்க உள்ளது. "எங்களை எப்படியாவது காப்பாத்துங்க சார்" என்று பாதிக்கப்பட்ட பெண்களின் ஓலம் நம்மை கலங்கடித்து வருகிறது. இதற்கெல்லாம் நம் போலீசார்தான் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது!