ஏன் கதவை சாத்துறேன்னு கேட்ட பெண்ணின் கணவரையும்.. உறவுக்கு அழைத்த சேலம் மோகன்ராஜ்!
பெண்ணின் கணவரையும் உறவுக்கு அழைத்து இருக்கிறார் மோகன்ராஜ்
Recommended Video
சேலம்: "ஏன் கதவை சாத்துறே" என்று கேள்வி கேட்ட பெண்ணின் கணவரையும், ஆட்டோக்கார காமுகன் மோகன்ராஜ் உறவுக்கு அழைத்தாராம்!
சேலத்தை சேர்ந்த மோகன்ராஜுக்கு 2 ஆட்டோக்கள் உள்ள நிலையில், ஒன்றை தான் ஓட்டியும், இன்னொன்றை நண்பனுக்கு தந்து ஓட்ட சொல்லியும் வந்துள்ளார்.
2 மனைவிகள் இவரது பாலியல் வக்கிர தொல்லை தாங்காமல் ஓடிவிட்ட நிலையில், பல பெண்களுடன் தொடர்பு உறவு வைக்க தொடங்கி உள்ளார் மோகன்ராஜ்.
பாவம் உதித் சூர்யாக்கள்.. வெங்கடேசன்கள்தான் மிக மிக ஆபத்து.. நீட் தேர்வுதான் இத்தனைக்கும் காரணமா
ஆபாச வீடியோ
40-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளார் என்கிறார்கள். பள்ளி குழந்தைகளையும் விட்டு வைக்காமல், மோகன்ராஜும், அவனது நண்பர்களும் சேர்ந்து சீரழித்துள்ளனர். இதை தவிர ஆண்களுடனும் உறவு கொண்டுள்ளார் மோகன்ராஜ். இந்த புகாரில் போலீசில் வசமாக சிக்கி கொள்ளவும், இவரை செல்போனை பிடுங்கி போலீசார் பார்த்த போது, 7 பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் அம்பலமானது.
விசாரணை
அதில் ஒரு வீடியோ நேற்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து போலீசார் மோகன்ராஜிடம் விசாரித்து உள்ளனர். அப்போது இந்த பெண்ணை பற்றி மோகன்ராஜ் சொன்னதாவது: "அந்த பெண்ணுக்கும் எனக்கும் ஏற்கனவே உறவு இருந்தது. அதனால் அடிக்கடி உரிமையாக என்கிட்ட அந்த பெண் பணம் வாங்குவார்.
வீடியோ மிரட்டல்
கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட என்கிட்ட 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தார். ஆனால் என்கிட்ட அவ்வளவு பணம் இப்போதைக்கு இல்லைன்னு சொன்னேன். ஆனால், பணத்தை தந்தே ஆகணும்னு அந்த பெண் பிடிவாதம் பிடித்து கொண்டே இருக்கவும், என்கிட்ட பணம் சுத்தமா இல்லை என்று சொன்னேன். ஆனால், அதை நம்பாமல், 2 பேரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை வெளியே விடுவேன் என்று அந்த பெண் என்னை மிரட்டினார்.
பழி வாங்கினேன்
அதனால் நான் பதிலுக்கு அந்த பெண்ணை பழி வாங்க நினைத்தேன். போட்டோ வெளியிடுவதாக சொன்னதால், அந்த பெண்ணை வீடியோவே எடுத்து வெளியிட வேண்டும் என்று நினைத்துதான் வீட்டுக்கு வரவழைத்தேன். வீடியோவும் அவருக்கு தெரியாமல் எடுத்தேன். அதன்பிறகு அந்த பெண்ணை இந்த வீடியோ வைத்து மிரட்டினேன். ஆனால் நான் வன்கொடுமை செய்வதாக நேற்று வீடியோ வெளிவந்து விட்டது" என்றாராம்.
தன்பாலின உறவு
இதனிடையே, வீடியோவில் இருக்கும் சம்பந்தப்பட்ட பெண், கணவர் மூலம் போலீசில் புகார் தந்திருக்கிறார். அது என்ன புகார் என்றால், பெண்ணின் கணவரை உறவுக்கு அழைத்தாராம் மோகன்ராஜ். இந்த புகாரில்தான் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படிதான் இப்படி குமட்டல் தகவல்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.