பிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்!
சேலம்: சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை சேலம் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடி அனுபவிக்கின்றனர்.
ஆடி பிறப்பின் முதல் நாளை தேங்காய் சுட்டு வரவேற்றனர் சேலம் மக்கள்
மாங்கனி நகரமான சேலம் பழங்காலத்தில் மழவர் தேசம் என அழைக்கப்பட்டது. பழமையும் புதுமையும் நிறைந்த நகரமாக இருக்கிறது சேலம்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் இல்லாத வழக்கமாக சேலம் சுற்றுவட்டாரங்களில் தேங்காய் சுடும் விழா ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
ஆடியை வரவேற்கும் வகையில் சேலத்தின் பல பகுதிகளில் இன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
வறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்
அதனால் ஆடி 1-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பதும் உண்டு. சமூக வலைதளங்களில் சேலம் மாவட்டத்தின் வாருங்கள் தேங்காய் சுட்டு சாப்பிடுவோம் என பதிவிட்டு வருகின்றனர்.