சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்கனவே ரெண்டு.. 3வதாக ஒரு காதலன்.. பைக்கில் ஜாலி ரைடு.. கொந்தளித்த 2வது லவ்வர்.. பரிதாப பத்மா!

3வது இளைஞரை மணக்க முயன்ற பெண்ணுக்கு கத்திகுத்து விழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சேலம்: ஏற்கனவே ரெண்டு பேர் இருக்கிறார்கள்.. இவர்களை தவிர, 3வது காதலனுடன் பைக்கில் ஜாலியாக சென்றுள்ளார் பத்மா.. இதை பார்த்த 2வது காதலன் பத்மாவை வெறிகொண்டு கத்தியால் குத்தி உள்ளார்.. தலையை சுத்த வைக்கும் இந்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர்தான் பத்மா.. இவரது கணவர் பெயர் சுந்தரராஜன்.. கொஞ்சநாள்தான் இவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.

அதற்குள் அன்பரசு மீது காதல் வந்துவிட்டது.. அன்பரசு சாமியாம்பாளையத்தை சேர்ந்தவர்.. ஒருகட்டத்தில் அன்புரசு இல்லாமல் பத்மாவால் இருக்க முடியவில்லை. அதனால், சுந்தரராஜனை விட்டுவிட்டு, அன்பரசுவை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார்.

கிரைம் மினிஸ்டர்.. இஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக கோரி.. பல்லாயிரம் பேர் போராட்டம்கிரைம் மினிஸ்டர்.. இஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக கோரி.. பல்லாயிரம் பேர் போராட்டம்

ஜாலி

ஜாலி

வீட்டை விட்டு ஓடிப்போன பத்மா, தனியாக ஒரு வீடு பார்த்து அங்கு அன்பரசனுடன் குடியேறினார்.. 3 மாதம் 2 பேருமே ஜாலியாக இருந்தனர்.. அதன்பிறகு அன்புரசுவை பத்மாவுக்கு சலித்து விட்டது.. அதனால் தமிழ்செல்வன் என்பவர் மீது லவ் வந்துவிட்டது.. அன்பரசுவை தனியாக தவித்துவிட்டு, அந்த வீட்டை விட்டும் ஓடிப்போய்விட்டார்.

தமிழ்செல்வன்

தமிழ்செல்வன்

இப்போது, தமிழ்செல்வனை கல்யாணம் செய்ய போகிறார்.. அதற்கு முன்னதாக பைக்கில் அவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்தார் பத்மா.. இந்த ஜோடியை பார்த்ததும் தமிழ்செல்வனுக்கு தூக்கி வாரிப்போட்டது.. அந்த ஆத்திரத்தில் கை நிறைய மிளகாய் பொடியை தூக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த பத்மா மீது தூவினார்.. இதை பார்த்த அன்பரசு, பைக்கை அங்கேயே போட்டு விட்டு தலைதெறிக்க தப்பி ஓட, பின்னாடியே பத்மாவும் ஓடினார்..

கத்திகுத்து

கத்திகுத்து

ஆனால், தமிழசெல்வன் விடவில்லை.,. துரத்தி துரத்தி சென்று பத்மாவை மடக்கிவிட்டார்.. பிறகு பத்மாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக தெரிகிறது.. இதனிடையே தப்பி ஓடிய அன்பரசு தேவூர் போலீசுக்கு போய் தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து பத்மாவை மீட்டனர்.. உடம்பெல்லாம் கத்திகுத்து பட்டு பத்மா விழுந்து கிடந்தார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.. இப்போது தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. அன்பரசுவும் கைதாகி உள்ளார்.. இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் முதல் கணவன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

English summary
Salem woman Married Three and Police arrested one
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X