அரசு பள்ளியில் பூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியை உடன் ஆசிரியர் காதல் படம்.. கரெக்டாக வந்த கணவர்!
சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, பூட்டிய வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியைக்கு ஆசிரியர் ஒருவர் காதல் பாடம் நடத்தியது அம்பலம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்தில் துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக, அணைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் (35 வயது) பணியாற்றி வருகிறார். தினமும் தனது இருசக்கர வாகனத்தில் தலைமை ஆசிரியையை, அழைத்துக் கொணடு வந்துள்ளார் பகுதி நேர ஆசிரியர். இதற்கிடையே அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.
தனிமையில் பேச்சு
இந்நிலையில் நேற்று, பள்ளிக்கு வந்த இருவரும், பூட்டிய வகுப்பறைக்குள் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கேள்விப்பட்டு ஆத்திரத்துடன் அங்கு வந்த தலைமை ஆசிரியையின் கணவர், பள்ளிக்கு வந்து வகுப்பறை கதவை தட்டி தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
உயர் அதிகாரிகள் வந்தனர்
இதனால் சத்தம் கேட்டு அந்த கிராம மக்கள் பள்ளியில் குவிந்தனர். கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன் வந்தார். அதன் பின்னரே, கதவை திறந்து இருவரும் வெளியே வந்தார்கள்.
பொதுமக்கள் ஆவேசம்
பின்னர், நடந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் அவர் விசாரித்தனர். அப்போது, பள்ளி வகுப்பறையில் ஒழுக்க கேடாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை பணியாற்ற அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் கூறினர்..
ஆத்தூர் பகுதியில் பரபரப்பு
இதுபற்றி உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். பூட்டிய வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியைக்கு ஆசிரியர் ஒருவர் காதல் பாடம் நடத்தியதாக சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல தகவல் பரவியதால் ஆத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.