தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்
சேலம்: சேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்குகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி, கொங்கணாபுரம், சித்தூர், பூலாம்பட்டி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலத்தை தொடர்ந்து திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று பிற்பகலில் இருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள காளி பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
விடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு!
இதனால் அப்பகுதியில் வாக்களிக்க சென்றவர்கள் வாக்கு அளிக்க இயலாமல், பாதி வழியிலேயே வீடு திரும்பிய நிகழ்வுகளும் நடந்தன. வாட்டி வதைத்த கோடை வெயிலில் இருந்து இன்று தப்பித்த மகிழ்ச்சியில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட மக்கள் உள்ளனர்.