அடங்காத அரியர் பாய்ஸ்.. "மாணவர்களின் மனித கடவுளே.." முதல்வரை வாழ்த்தி சேலத்தில் செம போஸ்டர்
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலத்தில் 'மனித கடவுளே' எனக் குறிப்பிட்டு மாணவர்கள் போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர்.
Recommended Video
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்லூரிகளில் அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். இதற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
நீட் தேர்வு: 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல இடங்களில் விதம் விதமான வாழ்த்துகள், நன்றி தெரிவித்து போஸ்டர்களை அச்சடித்து ஒட்டினர். சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் "மாணவர்களின் மனித கடவுளே.. எங்கள் ஓட்டு உங்களுக்கே" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பினர் ஒட்டியுள்ளனர்.
அந்தப் போஸ்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து நன்றி செலுத்துவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இப் போஸ்டர்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.