சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு அச்சறுத்தலா... உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சுற ஆள் நான் கிடையாது... எடப்பாடியார் ஆவேசம்!

Google Oneindia Tamil News

சேலம்: எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது. அண்ணன், தம்பி பிரச்சினை என்று அமைச்சர் வேலுமணி பேசியது தவறாக ஊடகத்தில் வெளிவந்துள்ளது என்று அவர் கூறினார்.

நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி காணப்படுகிறது. எனவே அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது. அண்ணன், தம்பி பிரச்சினை என்று அமைச்சர் வேலுமணி பேசியது தவறாக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.

அதிமுக வெற்றி பெறும்

அதிமுக வெற்றி பெறும்

அதிமுகவில் கட்சி விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைபோல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர். நீதிமன்றம் உத்தரவுபடி பலரது சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுகிறது. அரசுக்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது.தொகுதி பங்கீட்டில் இருபறி என்பதே கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி காணப்படுகிறது. எனவே அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

டிடிவி தினகரன் முயற்சி தோல்வி

டிடிவி தினகரன் முயற்சி தோல்வி

அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய நினைத்தால் தலைமை ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் 18 எம்எல்ஏக்களை பிரித்து சென்றவர் டிடிவி தினகரன். அவரது முயற்சி செயல்படவில்லை. அதனால் அமமுகவை தொடங்கினார். எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவமனை கொண்டுவந்து அதிமுக சாதனை படைத்துள்ளது.

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்

மத்திய அரசின் உதவி பெற்று ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். திமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது. அதிமுகவில் எள்முணை அளவுகூட பிரச்சினை இல்லை. திமுகவினர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன்.

English summary
I have no room for talk of threat. Chief Minister Edappadi Palanisamy said that he was not afraid of rolling and intimidation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X