கோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்!
திருமாவளவனை சரமாரி குற்றஞ்சாட்டினார் வேலூர் இப்ராஹிம்
சேலம்: "கோயில் சிலைகளை பற்றி பேசும்போது ஆபாசமாக இருக்கிறது.. அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று பல்வேறு வகையில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்த திருமாவளவன், இப்போது தேர்தல் நெருங்குவதால், சிதம்பரம் கோவிலில் போய் பொட்டு வைத்துக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்" என்று வேலூர் இப்ராஹிம் விமர்சித்து உள்ளார்.
சேலம் கோரிமேடு பகுதியில், தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசும்போது முழுக்க முழுக்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விமர்சித்தும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இப்ராஹிம் சொன்னதாவது: "தமிழகத்தில் உள்ள தமிழக முஸ்லிம்களை தவறான முறையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களின் மூலமாக வன்முறையும் மூலமாக கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற தமுமுக என்ற அமைப்பு, எஸ்டிபிஐ பிஎஃபை போன்றவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அவர்களால் இந்த சமூக நல்லிணக்கத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய கேடாக இருக்கிறது.. இது போன்ற அமைப்புகளை தடுக்க வேண்டும்.
வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கொண்டிருக்கிறார் திருமாவளவன்.. கடந்த காலங்களில் இந்துமத வழிபாட்டுத் தலத்தில் இருக்கக்கூடிய சிலைகளை பற்றிப் பேசும்போது ஆபாசமாக இருக்கிறது, அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று பல்வேறு வகையில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்தவர், இப்போது தேர்தல் நெருங்கும் காலமென்பதால் சிதம்பரம் கோவிலில் போய் பொட்டு வைத்துக்கொண்டு அந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
தீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி
தமிழக முஸ்லிம்கள் இவர் பின்னால் செல்வது என்பது ஆபத்தானது.. இஸ்லாமிய மக்கள் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள்.. திருமாவளவன் என்ற தீய சக்தியை வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் தமிழக மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடுத்த கட்ட பிரச்சாரமாக அமையும்" என்றார்.