உட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ!
போதை நபரை ஆய்வாளர் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகிறது
Recommended Video
சேலம்: "உட்காருடா கீழே.. உட்காரு.." என்று போலீஸ் எஸ்ஐ ஒருவர், போதை நபரை அடித்து மிரட்டும் காட்சி இணையத்தில் வேக வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தங்கமாபுரி பட்டணம். இந்த பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஹெல்மெட் இல்லாமல், முறையான ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள், ஓவர் ஸ்பீடில் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்து கொண்டு இருந்தனர்.
மேட்டூர் அடுத்த கருமலைக்கூடல் போலீஸ் ஷ்டேஷனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அர்த்தநாரி என்பவரும் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அவர் தண்ணி அடித்துள்ளதாக தெரிகிறது. அவரை வழிமறித்து விசாரணை நடத்தினார் அர்த்தநாரி.
உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி!
மதுபோதையில் இருந்ததால், அந்த நபர் அர்த்தநாரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அர்த்தநாரி அந்நபரை நிற்க வைத்து அடித்துள்ளார். பிறகு, "உட்காருடா கீழே.. உட்காரு" என்று சொல்லி மீண்டும் அடித்து மிரட்டி உள்ளார்.
போதை ஆசாமியை அர்த்தநாரி அடிக்கும் காட்சியை, அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு விட்டார். இந்த காட்சிதான் தற்போது வேகமாக பரவி வருகிறது. இவ்வளவு கண்டிப்புடன் நடந்து கொள்வதா என்று கண்டனங்களும் குவிந்து வருகின்றன.