மேட்டூர் அணை நீர்மட்டம்...கிடு கிடு உயர்வு...86.9 அடியாக உயர்ந்தது!!
மேட்டூர்: காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் 86.9 அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், தமிழகத்துக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
Recommended Video
கபினி, கிருஷ்ணராஜ சாகா் ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,000 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 45,000 கன அடியாக இருந்தது. இது இதற்கு முந்தைய வியாழக் கிழமையில் வெறும் 6,000 கன அடியாக இருந்தது. தற்போது 90,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.830 ஆக இருந்தது. இது தற்போது 86.9 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 120 அடியாகும். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
4.5 செமீக்கு கடல் அலை.. பலத்த காற்று.. தமிழகத்தில் இன்றிலிருந்து கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
கடந்தாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு 2.3 லட்சம் கன அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் தருமபுரி மாவட்டம் பிலிகுண்ட்லுவுக்கு வந்த நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியாக இருந்தது.
இன்றைய காலை நிலவரம் கர்நாடகாவிலிருந்து 92 ஆயிரத்து 852 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவானது சற்று குறைக்கப்பட்டுள்ளது.