நயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி
Recommended Video
சேலம்: சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
திரையுலகில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது
மூத்த நடிகரான ராதாரவியின் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் எதிரொலியாக, தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் ராதாரவி, நேற்று சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று நடிகர் ராதாரவி விளக்கமும் அளித்தார்.
இந்தநிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, திமுக தலைமையில் குழப்பம் உள்ளது. சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
விளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.. புதிய வீடியோ வெளியிட்ட மநீம
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றார். நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது, இது தானாக வெளியே வரும் என்றும் ராதாரவி கூறியுள்ளார்.
இதனிடையே, தனக்கு வாக்கு உரிமை வழங்கப்படாததால் நீதிமன்றம் சென்றுள்ள நடிகர் ராதாரவி, தேர்தலை நடத்த விடமாட்டேன். ஜூன் 23 ந் தேதி கண்டிப்பாக நடிகர் சங்க தேர்தல் நடக்காது என்று தொடர்ந்து வருகிறார். இதுவரை, பாண்டவர் அணியினர் 9 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.