சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி!

சாதியை சொல்லி திட்டியதால் கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சாதியை சொல்லி திட்டியதால் கணவன் மீது புகார் கொடுத்த மனைவி -வீடியோ

    சேலம்: கல்யாணம் ஆகி ஒருவாரம்தான் ஆனது.. ஹனிமூன் முடிஞ்சாச்சு.. ஆனால் சாதியை சொல்லி கணவன் தன்னை திட்டியதால், ஸ்டேஷனில் தூக்கி உட்கார வைத்துவிட்டார் புது மனைவி சோபியா!

    சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். 26 வயதாகிறது. டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கிறார். இவருக்கு பக்கத்து வீட்டு பெண் 24 வயது சோபியா.

    Wife complaint against Husband in the Caste issue near Salem

    பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி பார்த்து கொள்வது, பேசிக் கொள்வது என பழக்கம் அதிகமானது. இது காதலாக மாறியது. இருவரும் வேறு வேறு சாதியை சார்ந்தவர்கள். காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்தது. வழக்கம்போல கொந்தளித்த பெற்றோர், கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் எப்படியாவது வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அதன்படியே போனவாரம்தான் பழனி முருகன் கோயிலில் மாலை மாற்றி கல்யாணம் செய்து கொண்டனர். ஒருவாரம் முழுக்க ஹனிமூன்.. நிறைய இடங்களுக்கு இந்த காதல் ஜோடி சுற்றிதிரிந்தது. ஊருக்கு போனால் பிரச்சனை வந்துவிடும் என்று நினைத்து, சேலம் சூரமங்கலம் பகுதியில் ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்திவந்தனர்.

    19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்!19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்!

    ஒருவாரம் ஆன நிலையில் சுரேஷ்குமாரும், அவரது குடும்பத்தினரும் சோபியாவை சாதி ரீதியாக பெயரை சொல்லி அடிக்கடி கடுப்பேற்றி வந்துள்ளனர். இப்படி சாதியை சொல்லி திட்டி கொண்டிருந்தால், இது சரிப்பட்டு வராது என்று நினைத்து, சோபியா சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் சுரேஷ்குமார் மீது புகர் தந்தார். கணவர் மீது மட்டுமில்லை, மாமனார், மாமியாரையும் புகாரில் குறிப்பிட்டு சொன்னார்.

    இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். இந்த சமயத்தில் மாமியார், மாமனார் எஸ்கேப் ஆகிவிடவும்... அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில், சாதியை சொல்லி திட்டியதால், கணவனை சிறைக்கு அனுப்பிய விவகாரம் பரபரப்பை தந்துள்ளது.

    English summary
    Near Salem, Wife complaint against husband for scolding about her caste in a week, and Police arrested him
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X