சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லாதான் உட்கார்ந்திருந்தார் அகல்யா.. திடீரென கையில் இருந்த பேனா கத்தியை.. ஓடும் பஸ்சில் கொடுமை!

ஓடும் பஸ்ஸில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓடும் பஸ்ஸில் திடீரென பேனா கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்ட பெண்-வீடியோ

    சேலம்: அதுவரைக்கும் பஸ்ஸில் நல்லாதான் உட்கார்ந்திருந்தார் அகல்யா.. திடீரென கையில் இருந்த பேனா கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொழிலாளர் இல்லப் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் முன்னாள் ராணுவ வீரர், பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இவர் மேட்டூர் மின்வாரிய பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    Woman attempt suicide in private bus near Mettur

    இவரது மனைவி அகல்யா 48 வயதாகிறது. இவர்களுக்கு காயத்ரி என்ற 23 வயது மகள் உள்ளார். ஆனால் 7 வருஷத்துக்கு முன்னாடி காயத்ரி ஒரு இளைஞரை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டார்.

    ஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சமாதானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் சேலம் சென்று விட்டு தனியார் பஸ்ஸில் மேட்டூர் திரும்பி கொண்டிருந்தார் அகல்யா. அப்போது குள்ளமுடையானூர் என்ற இடத்தின் பெயர் பலகையை பார்த்தார். அங்குதான் மகள் காயத்திரி வசிக்கிறார். அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆவேசமான அகல்யா, கையில் வைத்திருந்த பேனா கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

    குடும்ப தகராறு... போலீஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து - மனைவிக்கு நேர்ந்த விபரீத முடிவு குடும்ப தகராறு... போலீஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து - மனைவிக்கு நேர்ந்த விபரீத முடிவு

    கழுத்தில் ரத்தம் பீறிட்டு வந்ததைக் கண்ட பயணிகள் அலறினர். இதனையடுத்து அகல்யா சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்போது அகல்யாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஓடும் பஸ்ஸில் பெண் ஒருவர் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Woman attempt suicide inside of running bus in Mettur due to Depression
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X