சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டோ மோகன்ராஜ் என்னை கெடுத்துட்டார்.. கணவருடன் வந்து புகார் கொடுத்த பெண்.. சேலத்தில் பரபரப்பு

சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ் மீது பெண் பரபரப்பு புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்..வீடியோ

    சேலம்: "ஆமாம்.. என்னை மோகன்ராஜ் பலாத்காரம் செய்தார்" என்று பெண் ஒருவர் சேலம் கமிஷனரிடம் துணிச்சலாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஒரு வாரத்துக்கு பிறகு ஆட்டோக்கார மோகன்ராஜ் விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

    கடந்த சில தினங்களாகவே சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் குறித்த செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    காக்காபாளையம் பஸ் ஸ்டேண்ட் அருகே ஒரு பொது கழிப்பறை உள்ளது. இங்கு பாத்ரூமுக்குள் வந்த முருகேசன் என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தபிறகுதான், பல விவகாரங்கள் வெளியே வந்தன.

    பின்னாலிருந்து சீட் வழியாக கையை நுழைத்து.. அசிங்கமாக நடந்து கொண்டார்.. கண்டக்டர் மீது பெண் பாய்ச்சல்பின்னாலிருந்து சீட் வழியாக கையை நுழைத்து.. அசிங்கமாக நடந்து கொண்டார்.. கண்டக்டர் மீது பெண் பாய்ச்சல்

     சோஷியல் மீடியா

    சோஷியல் மீடியா

    அவரிடம் இருந்த செல்போனில், மோகன்ராஜ் பெண் ஒருவரை மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பதும், அந்த வீடியோவை, மோகன்ராஜே, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இதைதவிர, மோகன்ராஜ் 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவை அந்த செல்போனிலேயே மோகன்ராஜ் பதிவுசெய்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

     விசிக

    விசிக

    ஆனால், அந்த 7 பேரில் ஒரு பெண்கூட இது சம்பந்தமான புகார் எதுவும் இதுவரை தரவில்லை என்றனர் போலீசார். மோகன்ராஜ், விசிக ஆட்டோ தொழிற்சங்க தலைவர் என்றதுமே கூடுதல் பரபரப்பு தொத்தி கொண்டது. ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்னமேயே மோகன்ராஜை தங்கள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக விசிக சார்பில் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பாக போலீசில் புகாரும் தரட்டுள்ளது.

     துணிச்சல்

    துணிச்சல்

    இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த 7 பெண்கள் வீட்டிற்கு, மோகன்ராஜ் ஆதரவாளர்கள் சென்று பேரம் பேசியுள்ளனர். போலீசுக்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சியும், மீறி நடந்து கொண்டால், வீடியோவை இணையத்திலும் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் யாருமே போலீசில் புகார் தர முன்வராமல் இருந்தனர். இந்நிலையில்தான் ஒரு பெண் துணிச்சலுடன் முன்வந்து போலீசில் புகார் தந்துள்ளார்.

     கண்ணீர் புகார்

    கண்ணீர் புகார்

    தன்னுடைய கணவருடன், கமிஷனரை சந்தித்து இந்த புகாரை தந்து, எப்படியாவது மோகன்ராஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று கண்ணீர் விட்டு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து இந்த பலாத்கார வழக்கு மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

     நம்பிக்கை

    நம்பிக்கை

    மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் தரலாம் என்றும், அவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் நம்பிக்கையும், உறுதியும் தந்துள்ளனர். ஏற்கனவே மோகன்ராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேரில் வந்து தைரியமாக புகார் தந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைகிறது... அத்துடன் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு மோகன்ராஜ் விவகாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

    English summary
    Woman complaint against Automan Mohanraj in Salem Commissioner Office and Action is being taken on that complaint.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X