சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடு ராத்திரி.. சரியான போதை.. தேவி வீட்டு கதவை தட்டி டார்ச்சர்.. பத்ரகாளியாய் மாறி.. சேலம் ஷாக்

தொல்லை தந்த நபர் மீது சுடுநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சேலம்: நடுராத்திரி.. ஒருத்தர் போதையிலேயே நடந்து போய் தேவி வீட்டு கதவை தட்டி டார்ச்சர் செய்து உள்ளார்.. அதுக்கப்பறம் தேவி, பத்ரகாளியாய் மாறிய செய்திதான் இது!

சேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்... கூலித்தொழிலாளி.. 24 வயசாகுது.. இவருக்கும். அதே பகுதியில் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண்ணுக்கும் தகராறு இருந்தது வந்தது. இந்த பெண்ணின் அப்பா பெயர் ராதாகிருஷ்ணன்.

 woman throws hot water to drunkan man for torturing at night near selam

அது மட்டுமில்லாமல் தினமும் தண்ணி அடிச்சிட்டு, ராத்திரி நேரம் ஆயிடுச்சுன்னா, தேவியின் வீட்டு கதவை தட்டுவதுதான் ஜனார்த்தனுக்கு பொழப்பாம்.. இந்நிலையில், நேற்றிரவு 2 மணிக்கு செம போதையில் இருந்த ஜனார்த்தனன், வழக்கம்போலவே ராதாகிருஷ்ணன் வீட்டு கதவை தட்டினார்.. தண்ணி அடிக்க சரக்கு வேணும் என்று கேட்டு தொந்தரவும் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில், அங்கிருந்த தேவியின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.. "மரியாதையா சரக்கு கொடு" என்று கேட்டுள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த தேவி சுடு தண்ணியை கொதிக்க கொதிக்க எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஜனார்த்தனன் மீது வீசி உள்ளார்... அது ஜனார்த்தனின் முகம், நெஞ்சு பகுதி மொத்தமும் பட்டு வெந்துவிட்டது.

சுடுநீர் பட்டதில் வலியால் ஜனார்த்தன் அலறி துடித்தார்.. போட்ட போதையெல்லாம் காணாமல் போய்விட்டது.. அவர் போட்ட கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். முகம், மார்பு பகுதி வெந்து போன நிலையில் ஜனார்த்தனன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

"சிக்னலை" வச்சு கண்டுபிடிங்க பார்ப்போம்.. சில்மிஷ சாமியார் நித்தியானந்தாவின் குறும்பு.. ஓவர்தான்!

இது குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.. இறுதியாக, சுடுதண்ணீர் ஊற்றிய தேவியை கைது செய்த கொண்டலாம்பட்டி போலீசார், இனிமேல் இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று அட்வைஸ் தந்து ஜாமீனில் விடுவித்தனர். இப்போது ஜனார்த்தனம் ஆஸ்பத்திரியில் கட்டு போட்டு கொண்டு படுத்திருக்கிறார்.

English summary
woman throws hot water to drunkan man for torturing at night near salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X