2 முறை கர்ப்பமாகி.. அபார்ஷன் செய்து.. கதறிய பிரியா.. பதறிப் போன சேலம் கலெக்டர் ஆபீஸ்!
காதல் தோல்வி காரணமாக இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
சேலம்: 2 முறை கர்ப்பமாகி, அபார்ஷனும் செய்துள்ளார் பிரியா.. காதலனை நம்பி தன்னை இழந்ததுடன், தற்கொலைக்கும் முயன்றுள்ள சம்பவம் சேலம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பை தந்துவிட்டது.
சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் இந்து பிரியா.. 30 வயதாகிறது.. ஒரு பிரைவேட் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்.
சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்.. அவருக்கும் 30 வயதாகிறது..இவர் டிகிரி முடித்துவிட்டு, ஒரு பிரைவேட் காலேஜில் படித்து வருகிறார்.. சூப்பர் மார்கெட்டிற்கு அடிக்கடி செல்லும்போதுதான், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது... மொத்தம் 5 வருட தீவிரமான காதல் இது.
இந்த 5 வருடத்தில் பிரியா 2 முறை கர்ப்பமுற்று கலைத்துவிட்டார்.. இதையடுத்து கடந்த 3 மாதங்களாக காதலர்களிடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.. இந்த சமயத்தில்தான், கலைச்செல்வனுக்கு வீட்டில் வேறு பெண்ணை பார்த்து நிச்சயம் நடந்தது.. கலைச்செல்வன், இவரது அப்பா ராஜ் என்பவர், திமுக ஊராட்சி துணை செயலாளராக உள்ளார்.
கலைச்செல்வனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடந்ததை அறிந்த பிரியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் அம்மாப்பேட்டை ஸ்டேஷனில் காதலன் மீது புகார் தந்தார்.. ஆனால் போலீசாரோ அந்த புகாரை பெற்றுக் கொண்டதோடு சரி.. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தாத்தாவுக்கு நேரம் சரியில்லை.. 78 வயசு.. பொண்ணுக்கு 17 வயசுதான்.. "அந்த" 22 நாளில் எல்லாம் போச்சு!
மேலும் இரு தரப்பையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மறுநாளே, அதாவது கடந்த திங்களன்று கலைச்செல்வனுக்கும் அந்த பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பிரியா, சேலம் கலெக்டர் ஆபீஸ் வந்தார்.. பிறகு திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன்மீது கொட்டி தீக்குளிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பிரியாவை மீட்டனர்.. அப்போது பிரியா ஒரு லெட்டரை கையில் வைத்திருந்தார்.. அதை வாங்கி பார்த்தபோது, அம்மாபேட்டை மகளிர் போலீசார், கலைச்செல்வனிடம் பணம் வாங்கி கொண்டு, தான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு பிரியாவை சமாதானம் செய்த போலீசார், அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.