சிங்கப்பூரில் தாக்கம் சற்று குறைகிறது... இன்று மேலும் 528 பேருக்கு கொரோனா
சிங்கப்பூர்: கொரோனா தொற்று நோயின் தாக்கம் சிங்கப்பூரில் சற்று குறைந்திருக்கிறது. இன்று புதியதாக 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஒரே வாரத்தில் கிடுகிடுவென கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்தது. ஆசியாவில் சீனா, இந்தியாவைத் தொடர்ந்து சிங்கப்பூர்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வந்தது.
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு இதுவரை 14 பேர் பலியாகினர். பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.
நாள்தோறும் பல நூறுபேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கொரோனா- ரேபிட் டெஸ்ட் கிட்- தமிழக முதல்வர் எடப்பாடிக்கு வைகோ சரமாரி கேள்வி
Recommended Video
இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,951 ஆக அதிகரித்துள்ளது.