சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுவானில் விமானத்தில் மரணம் அடைந்த அருள்சாமி.. இந்தோனேசியாவில் உடல்.. மீட்க போராடும் குடும்பம்!

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அருள்சாமி செங்கோல் என்ற நபர் விமானத்திலேயே மரணமடைந்தார்.

By Staff
Google Oneindia Tamil News

பாலி: சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அருள்சாமி செங்கோல் என்ற நபர் விமானத்திலேயே மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார் சிவகங்கையை சேர்ந்த அருள்சாமி செங்கோல். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியா வழியாக சென்னை விமானத்தில் ஏறி உள்ளார். ஆனால் விமானத்தில் வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

A Tamilian dies in Singapore Plane bound to Chennai: Family struggles to get his body

இந்நிலையில் அவரின் உடல் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலை தங்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கோரியும் இந்தோனேசியாவிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டுவர உதவுமாறும் இறந்தவரின் உறவினர்கள் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

A Tamilian dies in Singapore Plane bound to Chennai: Family struggles to get his body

அதனடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதினார். இறந்தவரின் உடலை உடனே மீட்டுத்தர வேண்டும், உடலை உடனே அவர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் அனுப்பியுள்ளார்

இதனால் இறந்தவரின் உடல் விமானம் மூலம் விரைவில் தமிழகத்திற்கு கொண்டுவர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
A Tamilian dies in Singapore Plane bound to Chennai: Family struggles to get his body back home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X