சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு மொத்தம் 2532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் அந்த நாட்டில் பாதிக்கப்படும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சிங்கப்பூர் அரசு தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
Comments
English summary
59 Indians working in Singapore are among the 233 new coronavirus cases reported.
Story first published: Monday, April 13, 2020, 8:20 [IST]