இடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை!
விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர்: பறந்து கொண்டிருந்த விமானத்தில், பெண் ஊழியரின் இடுப்பை பிடித்து கிள்ளிய இந்தியரை 3 வாரம் கம்பி எண்ண வைத்துவிட்டார் அந்நாட்டு ஜட்ஜ் ஒருவர்!!
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பரஞ்சபி நிரஞ்சன் ஜெயந்த். 34 வயதான இவர், ஒரு இந்திய வம்சாவளி ஆவார். கடந்த ஆகஸ்டு மாதம் இவர் சிங்கப்பூர் செல்ல வேண்டி வந்தது.
இதற்காக இவர் சிட்னி நகரிலிருந்து சிங்கப்பூருக்கு ஃப்ளைட் ஏற வந்தார். 'ஸ்கூட்' நிறுவன விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டையும் புக் செய்து, உள்ளே ஏறி உட்கார்ந்து விட்டார்.
தங்க டாய்லெட்டில் கக்கா போன விஜய் மல்லையா.. இனி செராமிக்தான் போங்க!
25 வயது பெண்
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் 25 வயசு அழகான பெண் ஜெயந்த் கண்ணில் பட்டது. அந்த பெண் விமான ஊழியர். மற்ற பயணிகளின் தேவையை கனிவான முறையில் கேட்டு கொண்டும், அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து கொண்டும் இருந்தார்.
உங்க செல்போன் நம்பர்?
அந்த பெண்ணையே திரும்பி திரும்பி பார்த்த ஜெயந்த், நேரே எழுந்து அந்த பெண்ணிடமே போய்விட்டார். "நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க" என்றார். அதை அந்த பெண் சிரித்தவாறு கேட்டு விட்டு விட்டார். ஆனாலும் ஜெயந்த் விடவில்லை. அந்த பெண்ணின் பின்னாடியே சென்று, "உங்க செல்போன் நம்பர் எனக்கு தர்றீங்களா?" என்று கேட்டு தொல்லை பண்ண ஆரம்பித்து விட்டார்.
இடுப்பில் சில்மிஷம்
அப்போதும் அந்த பெண், விமானம் இறங்கும்வரை எந்த பிரச்சனையும், தகராறும் வேண்டாம் என நினைத்து அமைதியாகவே ஒதுங்கி ஒதுங்கி போனார். ஃப்ளைட் இறங்க ஒரு மணி நேரம்தான் இருந்தது. அந்த நேரத்தில்ஜெயந்த், அந்த பெண்ணின் இடதுபுற இடுப்பை வருடி சில்மிஷம் செய்ய ஆரம்பித்தார்.
சிங்கப்பூர் ஏர்போர்ட்
இப்போது அந்த பெண் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். முதல் வேலையாக தனது அதிகாரியிடம் இந்த விஷயத்தை சொன்னார். அதன்பிறகு சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்துவிட்டது. சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே போலீசாரிடம் வேகமாக பெண் சென்று புகார் அளித்தார். இதையடுத்து ஃபிளைட்டிலிருந்து இறங்கியபோதே ஜெயந்த் கைது செய்யப்பட்டார்.
கருணை காட்டுங்கள்
புகாரின் அடிப்படையில் சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிபதியிடம் ஜெயந்த், "இடுப்பை பிடிச்சு கிள்ளும்போது நான் குடிபோதையில் இருந்துவிட்டேன். மன்னிக்கணும்.. கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என்றார். இதையடுத்து ஜெயந்த்துக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.