கொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு
சிங்கப்பூர்: கொரோனா லாக்டவுனால் சிங்கப்பூரில் தத்தளிக்கும் தமிழர்கள், தமிழகம் திரும்புவதற்கான சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா லாக்டவுனால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பல நாடுகளில் தத்தளித்து வருகின்றனர். இவர்களை மீட்க வந்தே பாரத் என்கிற சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சிறப்பு விமானங்கள், கப்பல்கள் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து 700 இந்தியர்கள் கப்பல் மூலமாக மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் தத்தளிக்கும் தமிழர்கள், தமிழகம் திரும்புவதற்காக வரும் 9-ந் தேதி முதல் சிறப்பு விமானங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்
டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணிக்க விரும்புவோர் https://www.hcisingapore.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.