சிங்கப்பூரில் திடீர் திருப்பம்: ஒரே நாளில் கொரோனா பாதித்த 425 பேர் குணமடைந்தனர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிய திருப்பமாக கொரோனா பாதித்த 425 பேர் ஒரே நாளில் குணமடைந்திருக்கின்றனர்.
ஆசிய நாடுகளில் இந்தியா, சீனாவை தொடர்ந்து சிங்கப்பூரில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை இந்தியர் உட்பட வெளிநாட்டினருக்குத்தான் கொரோனா பாதிப்பு அதிகம். இதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு மொத்தம் 23,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது; உயிரிழப்பு எண்ணிக்கை 2,83,846
இந்நிலையில் சிங்கப்பூரில் புதிய திருப்பமாக கொரோனா பாதித்த 425 பேர் ஒரே நாளில் நேற்று குணமடைந்தனர். இன்னொரு பக்கம் நேற்றும் 876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 2,721 பேர் குணமடைந்துள்ளனர்.