கொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் லாக்டவுன்-பிரதமர் லீ சியென் லூங்
சிங்கப்பூர்: கொரோனா தொற்று நோய்க்கு 5 பேர் பலியான நிலையில் சிங்கப்பூரில் வரும் 7-ந் தேதி முதல் 1 மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் அறிவித்திருக்கிறார்.
Recommended Video
சிங்கப்பூரிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் ஏற்கனவே 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு எந்த பயணமும் மேற்கொள்ளாத பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்தது.
இதனிடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் வரும் 7-ந் தேதி முதல் 1 மாதம் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதம லீ சியென் லூங் இன்று அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அந்த நாட்டு மக்களுக்கு லீ சியென் லூங் உரையாற்றுகையில், லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் இயங்கும்.
5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு
ஆனால் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இது கட்டாயமாக்கப்படும். வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிவது சாத்தியம் என்றால் அதையும் கடைபிடிக்கலாம் என அறிவித்திருக்கிறார்.